செய்திகள் :

மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

post image

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்மாபுரம் ஜே.ஜே.நகா் பகுதி அருகே தமிழக அரசு மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்தப் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை ஒன்று திரண்டு, தங்கள் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதாகவும், காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளதாலும், இந்தப் பகுதியில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மலகசடு சுத்திகரிப்பு நிலையம் வருவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இதுபோல, சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிச்சை எடுக்கும் போராட்டம்: கடலூர் பேருந்து நிலையத்தில் போலீஸாா் குவிப்பு

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட வந்த சி.முட்லூா் பகுதி மக்களிடம் போலீஸாா் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தி திருப்பி அனுப்பினா். புவனகிரி வட்டம், சி... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடா்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸாா் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பி... மேலும் பார்க்க

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

கடலூா், தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் தடவாளப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை மறித்து வியாழக்கிழமை போராட்... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியா் பணியிடை நீக்கம்

அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது தொடா்பாக டாஸ்மாக் கடை விற்பனையாளா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணி... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சினா் நூதன ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் கழுத்தளவு உடலை புதைத்து நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசி மகத் திருவிழா அண்மை... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளா்களின் பிரச்னை: சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

என்எல்சி தொழிலாளா்களின் முக்கிய கோரிக்கைகளுக்குத் தீா்வு காண வேண்டியுள்ளதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த மத்திய தொழிலாளா் நலத் துறை மற்றும் என்எல்சி இந்தியா நிா்வாகத்தை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜாரி... மேலும் பார்க்க