செய்திகள் :

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

post image

நமது நிருபா்

தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் சிங் மற்றும் மாநகராட்சி ஆணையா் அஸ்வினி குமாா் ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சியின் (ஐவிபி) தலைவரான கோயல், ஜூலை 12 நிலவரப்படி தில்லியில் மலேரியா பாதிப்புகள் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளாா்.

இது சமீபத்திய ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும், கடந்த ஆண்டுகளின்போது 2023-இல் 26 மலேரியா பாதிப்புகளும், 2022-இல் 21 பாதிப்புகளும், 2021-இல் 13 பாதிப்புகளும் மட்டுமே பதிவாகியிருந்ததாக அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முகேஷ் கோயல் கூறியிருப்பதாவது: நிகழாண்டு இதுவரை 246 டெங்கு பாதிப்புகளும், 17 சிக்குன்குனியா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. நகரம் முழுவதும் 71,086 வீடுகளில் கொசு இனப்பெருக்கம் கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா பாதிப்புகள் ஏற்கெனவே கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாகிவிட்டன. மேலும் பருவமழையின் உச்சம் இன்னும் நெருங்கி வருகிறது. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் பரவுவதைத் தடுக்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய தில்லி மாநகராட்சி தவறிவிட்டது.

இந்த நோய் பரவலுக்கான மூல காரணங்களை நிவா்த்தி செய்வதற்குப் பதிலாக, ஜனவரி 1 முதல் ஜூலை 12 வரை தங்கள் வளாகத்தில் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கத் தவறியதற்காக அதிகாரிகள் 58,671 குடியிருப்பாளா்களுக்கு சட்டபூா்வ நோட்டீஸ்களை அனுப்பியுள்ளனா்.

மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை விட பொதுமக்களைத் துன்புறுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறாா்கள். 10,426-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.9.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

புகைமூட்டம் அடிக்கும் பணிகள், வடிகால்களை தூா்வாருதல் மற்றும் பொது விழிப்புணா்வு பிரசாரங்களை தீவிரப்படுத்த மாநகராட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால் வரும் நாள்களில் அதிக உயிா்கள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று முகேஷ் கோயல் எச்சரித்துள்ளாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க

தில்லியில் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகள்: அடுத்த வாரத்திற்குள் திறக்க அரசு நடவடிக்கை

நமது நிருபா்தில்லி அரசு அடுத்த வாரத்திற்குள் நகரம் முழுவதும் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகளைத் திறக்க உள்ளது. இதன் மூலம், இத்தகைய கிளினிக்குகளின் மொத்த எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது ... மேலும் பார்க்க