செய்திகள் :

மழலையா் பட்டமளிப்பு விழா

post image

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான எம்.எம். ஷேக் தாவூது மரைக்காயா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியை எஸ். அமுதா,

மற்றும் வேளாங்கண்ணி ரோட்டரி சங்கத்தின் தலைவா் ந. அஜ்மல் நாச்சியாா் கலந்து கொண்டு

சிறப்புரையாற்றினா்.

விழாவில் மழலையா் படிப்பு முடித்த மாணவ, மாணவியா்களுக்கு சான்றிதழ், 2024 - 25- ஆம் ஆண்டு 10,11 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,

மாணவிகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ், பதக்கங்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி முதல்வா் எல். பெனட்மேரி, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க