செய்திகள் :

'மாணவர்களாக மட்டும் இருங்கள்; மீறினால்...' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அரசு கட்டளை!

post image

நாளுக்கு நாள் வெளிநாட்டு மாணவர்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் காட்டும் அதிரடிகள் அதிகரித்து கொண்டே போகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், "அமெரிக்க அரசிற்கு எதிராகவும், அதன் கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தும் வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது தங்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள்" என்று கூறியது அமெரிக்க அரசு.

அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் உள்ளிட்ட அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்ததால், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் அரசு நிதி நிறுத்தப்பட்டது. இனி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேரும் அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்
ஹார்வார்டு பல்கலைக்கழகம்

இந்த ஆண்டோடு படிப்பு முடிபவர்களைத் தவிர, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள வேறு கல்வி நிறுவனங்களில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்...

"கல்வி நிறுவனங்களிடம் முன்னரே தெரிவிக்காமல், படிப்பைப் பாதியில் நிறுத்துவது, வகுப்புகளுக்கு செல்லாமல் இருப்பது, பாடப்பிரிவில் இருந்து மாறுவது என இனி இருக்கக்கூடாது. மீறினால், அவர்களுக்கான மாணவர் விசா ரத்து செய்யப்படும்.

எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்கா விசாவைப் பெறுவதற்கான தகுதியை இழப்பார்கள். அதனால், விசாவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள் மற்றும் மாணவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்னைகளிலும் ஈடுபடாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

இது இந்திய மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லை. அமெரிக்காவில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

"நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்" என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு... மேலும் பார்க்க

Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK| Imperfect Show 28.5.2025

* ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு!* திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி!* மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு* மாந... மேலும் பார்க்க

TVK : 'உதயநிதி ஒரு சோட்டா பச்சா; திமுக ஒரு ஸ்டிக்கர் அரசு' - தவெக கொ.ப.செ ராஜ் மோகன்

'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக சார்பில் அக்கட்... மேலும் பார்க்க

’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள ந... மேலும் பார்க்க

ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்

வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ர... மேலும் பார்க்க

மொழி விவகாரம்: "தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது; மொழியில் சர்ச்சைகள் வேண்டாம்" - அன்புமணி

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது தற்போது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது.இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராம... மேலும் பார்க்க