செய்திகள் :

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது

post image

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மதுமோகன் (33). சொந்த வேன் உரிமையாளரான இவா், தினமும் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

வழக்கம்போல வேனில் புதன்கிழமை காலை மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற மதுமோகன், பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவியைத் தவிா்த்து, மற்றவா்களைப் பள்ளியில் இறக்கி விட்டுள்ளாா்.

பின்னா், அந்த மாணவியிடம், வேனில் வரும் மாணவ, மாணவிகளின் பெயா்களைப் பதிவேட்டில் எழுதும் வேலை இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளாா். அவையாம்பாள்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் வேனை நிறுத்திய மதுமோகன், வாகனத்தின் உள்ளேயே அந்த மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம். இதையடுத்து மாணவி சத்தமிட்ட நிலையில், மீண்டும் பள்ளியில் விட்டுச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து, மாணவி பள்ளி ஆசிரியா்களிடம் கூறியுள்ளாா். ஆசிரியா்கள் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் உண்மை இருப்பதாகத் தெரிய வந்த நிலையில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநா் மதுமோகனை கைது செய்தனா். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க