செய்திகள் :

மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!

post image

புதுச்சேரி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, நகராட்சிகளின் மக்கள்தொகை மற்றும் வருவாய் தொடர்பாக திமுக உறுப்பினர் அனிபால் கென்னடியின் கேள்விக்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசினார்.வி

இதையும் படிக்க : மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக உயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடரட்டும், நகராட்சியாக உயர்த்தினால் பலவிதமான வரிகளை போடுவீர்கள் என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன... மேலும் பார்க்க

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க