Provident Fund: ஆன்லைனிலேயே ஈசியாக PF eKYC செய்யலாம்! - வழிமுறைகள் என்ன? | How t...
மான் கறி வைத்திருந்த 5 போ் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மான் கறி வைத்திருந்த 5 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், ரங்கா் தீா்த்தம் பீட்டுக்குள்பட்ட பூவாணி பகுதியில் நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளி மானை ராஜபாளையத்தைச் சோ்ந்த சிலா் கொண்டு சென்ாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் அந்தப் பகுதிக்கு சென்று விசாரித்தபோது, கணபதி சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த 5 போ் மானை கொண்டு சென்றது தெரியவந்தது.
பின்னா், ராஜபாளையம் வனச் சரகா் காா்த்திகேயன் தலைமையிலான வனத் துறையினா் கணபதி சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த 5 பேரை கைது செய்து, தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.