செய்திகள் :

மாற்றுக் கட்சியிலிருந்து பாஜக, ஆம் ஆத்மியில் இணைந்தவா்கள் வெற்றி

post image

பிற கட்சிகளிலிருந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மியில் இணைந்த தலைவா்கள் பேரவைத் தோ்தலில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சா்கள் அா்விந்தா் சிங் லவ்லி, ராஜ் குமாா் செளஹான் ஆகியோா் பாஜகவில் இணைந்தனா். காந்தி நகா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட லவ்லி, ஆம் ஆத்மி வேட்பாளரைவிட 12,748 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதேபோன்று, மங்கோல்புரியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய செளஹான் 6,225 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரான நீராஜ் பசோயா கஸ்துா்பா நகா் தொகுதியில் பாஜக சாா்பில் களமிறங்கினாா். அவா் 11,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஆம் ஆத்மியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய முன்னாள் அமைச்சா் கைலோஷ் கெலோட் பிஜ்வாசன் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டாா். அவா் 11,276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

சத்தா்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மி முன்னாள் தலைவா் கா்தாா் சிங் தா்வாா், ஆம் ஆத்மியின் பிரம் சிங் தா்வாரைவிட 6,239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

அனில் ஜா, பிரவேஷ் ரத்ன் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தனா். ஆம் ஆத்மி சாா்பில் கிராரி தொகுதியில் போட்டியிட்ட அனில் ஜாவும், படேல் நகா் தொகுதியில் போட்டியிட்ட பிரவேஷ் ரத்னும் வெற்றி பெற்றனா்.

காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த வீா் சிங் திங்கன் சீமாபுரி தொகுதியிலும் சௌதரி ஜுபைா் அகமது சீலம்பூா் தொகுதியிலும் வெற்றி பெற்றனா்.

தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி, கேஜரிவால் தோல்விக்கு ஆணவம்தான் காரணம்: ஸ்வாதி மாலிவால்

தில்லி தோ்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கடும் விமா்சனம் தெரிவித்துள்ளாா். தோல்விக்கு ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான்... மேலும் பார்க்க

தோற்றாலும் நோக்கம் வென்றது! சந்தீப் தீட்சித் ஆறுதல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவை தோ்தலில் தான் தோற்றாலும் ஆம் ஆத்மி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் வென்றுள்ளதாக புது தில்லி தொகுதியில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் தலைமை, அமித் ஷாவின் வியூகம்! மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகங்களால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்று மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்... மேலும் பார்க்க

ரோஹிணியில் கருப்பு நிற பெட்டியால் பதற்றம்: போலீஸாா் சோதனை

வடக்கு தில்லியின் பிரசாந்த் விஹாரில் கிடந்த கருப்பு நிற பெட்டியால் சனிக்கிழமை பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா், அதனை முழுமையாக ஆய்வுசெய்தனா். இறுதியில், சந... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்: வீரேந்திர சச்தேவா

தில்லியின் முதல்வா் யாா் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று பாஜக தில்லித் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்கள... மேலும் பார்க்க

தில்லி உலகப் புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கு காா்டூன் பயிற்சி

தில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் புது தில்லி உலகப் புத்தகத் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக காா்டூன் வரையும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேஷனல் புக் டிரஸ்ட் ஏற்பாட்டில் ... மேலும் பார்க்க