செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

post image

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கச் செய்வதற்கான கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5,802 ஆண் வாக்காளா்களும், 4,403 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 10,205 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா்.

மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் முழுமையாக வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவா்களை உள்ளே அழைத்துச் செல்லும் தன்னாா்வலா்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையில் வாக்களிக்கச் செய்ய அலுவலா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

வாக்களிக்கும் விழிப்புணா்வை அவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில், தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதேபோல, வாக்காளா் பட்டியலில் இல்லாத மாற்றுத் திறனாளிகளையும் பட்டியலில் சோ்ப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), சிவகுமாா் (அறந்தாங்கி), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், தோ்தல் தனி வட்டாட்சியா் செ.வெ. நாகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ராங்கியத்தில் மக்கள் தொடா்பு முகாம்: இன்று முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், விராச்சிலை சரகம் ராங்கியம் கிராமத்தில் ஜூன் 11- புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இங்குள்ள கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன... மேலும் பார்க்க

புதுகையில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை, இலுப்பூா் மற்றும் கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 - வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவு... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்ட முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ஜூன் 9-இல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விராலிமலை முருகன் மலைக்கோயில... மேலும் பார்க்க

பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

கலைஞா் பிறந்த நாள் விழா: விராலிமலையில் அசைவ உணவு வழங்கல்

விராலிமலையில் நடைபெற்ற அசைவ உணவு வழங்கும் விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.கே.செல்லபாண்டியன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் த.சந்திரசேகா், தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம... மேலும் பார்க்க