செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள்

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள் முன்களப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மொத்தம் 30 முன்களப் பணியாளா்களுக்கு ரூ. 7.19 லட்சம் மதிப்பில் இந்த கையடக்கக் கணினிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.

முன்னதாக, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 490 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ப. புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க