செய்திகள் :

மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையான போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும், போட்டி அட்டவணை மாற்றம், தேசிய அணிக்கு விளையாட என வீரர்கள் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் மீண்டும் ஐபிஎல்லில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அணி நிர்வாகம் மாற்றுவீரர்களை அணியில் இணைத்து வருகின்றனர்.

இதேபோல மும்பை அணிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 2 லீக் போட்டிகளில் ஆடவுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி மீதமுள்ள லீக் போட்டிகளில் வென்று முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருந்தாலும், இந்த இரண்டு போட்டியுமே மும்பை இந்தியன்ஸுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையிலேயே இருக்கிறது.

இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், தென் ஆப்ரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் மும்பை அணியின் லீக் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். பிளே-ஆப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்க முடியாததால் அவர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ஆடும் பட்சத்தில், மாற்று வீரர்களாக விளையாடுவதற்கு, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரும், தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போர்ஷுக்குப் பதிலாக இலங்கை வீரர் சரித் அசலங்காவும் மும்பை அணியில் இணைந்துள்ளனர்.

பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த ஜானி பேர்ஸ்டோ, ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன நிலையில் அவரை ரூ.5.25 கோடிக்கும், ரிச்சர்ட் க்ளீசனை ரூ.1 கோடிக்கும், சரித் அசலங்காவை ரூ.75 லட்சத்துக்கும் மும்பை அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதையும் படிக்க: மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை!

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உல... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார். ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி 20... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்... மேலும் பார்க்க

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில... மேலும் பார்க்க