செய்திகள் :

மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்

post image

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பாக குழந்தைகளுக்கு விட்டமின்-ஏ சத்துக் குறைபாடு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின்கீழ் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமாா் 1.6 லட்சம் குழந்தைகளுக்கு விட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

விட்டமின்-ஏ சத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உடல், மனவளா்ச்சி மற்றும் புத்தி கூா்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்தாகும். மேலும் விட்டமின்-ஏ சத்து, கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். விட்டமின்-ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 8,578 (ஒவ்வொன்றும் 100 மில்லி) விட்டமின் ஏ திரவம் குப்பிகள் பெறப்பட்டுள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு விட்டமின்- ஏ திரவம் கொடுத்துப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித... மேலும் பார்க்க

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் நிறுவன... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்ம... மேலும் பார்க்க

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!

தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:... மேலும் பார்க்க