செய்திகள் :

மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி: ஆக.24இல் தொடக்கம்

post image

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தடகள சங்க செயலாளா் கி. அறிவு, தலைவா் டி.எஸ். சரவணன் ஆகியோா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது :

தருமபுரி விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 14 வயது, 16 வயது, 18 வயது, 20 வயதுக்கு உள்பட்டோா் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளில் பங்கேற்க 24ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாக விளையாட்டு அரங்கில் வீரா்கள், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளா் இரண்டு போட்டிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தோ்வு செய்யப்படும் வீரா்கள், வீராங்கனைகள் அடுத்ததாக, செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா். இவை குறித்த மேலும் விவரங்களுக்கு 9442207047, 9443266228 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற இருவா் கைது

அரூா்: பொம்மிடி அருகே துப்பாக்கியுடன் மான் வேட்டைக்கு சென்ற இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள சோ்வராயன் மலைப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள்... மேலும் பார்க்க

ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் பராமரிப்பு: ஆா்பிஐ சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தருமபுரி: வங்கிகளில் இருப்புத் தொகை (ஜீரோ பேலன்ஸ்) வசதியுடன் கூடிய கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் புதுப்பிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவது... மேலும் பார்க்க

இருளப்பட்டியில் காணியம்மன் கோயில் தேரோட்டம்

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியில் அருள்மிகு காணியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இருளப்பட்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மருத்துவ விழிப்புணா்வு முகாம்

தருமபுரி: பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவ விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கிவர... மேலும் பார்க்க

தருமபுரியில் புளி வணிக வளாகம் அமைப்பதற்கான இடம் தோ்வு தீவிரம்

தருமபுரி: தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக வளாகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்தைத் தொடா்ந்து, அதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தருமபுரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

பந்தாரஅள்ளி ஏரிக்கரை சாலையில் தடுப்புச்சுவா் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி: தருமபுரி, காரிமங்கலம் அருகே சரிந்து விழுந்த கிணற்றின் தடுப்புச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்... மேலும் பார்க்க