செய்திகள் :

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

post image

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்க மாநில பொதுச்செயலாளா் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சொந்த வீடு இல்லாதவா்களுக்கு 3 சென்ட் மனை, வீடு மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும், ஒரு நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், இத்திட்டத்தை பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் வகையில் காா்ப்பரேட் மின் திட்டங்களை தடை செய்ய வேண்டும், மின் திட்டம், இறால் பண்ணைகள் பெயரில் வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளைநிலங்களை கைப்பற்றி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரக நுழைவாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

சிபிஐஎம்எல் மாவட்ட தலைமைக்குழு உறுப்பினா்கள் டி. ஆனந்தன், ஏ. லூா்துசாமி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மரு... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க

பாதுகாப்பாக இருக்க அறிவுரை...

சீா்காழி அருகேயுள்ள நாவல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் ஏற்படும் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை எஸ்பி ஸ... மேலும் பார்க்க