செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மையம் (ஜுடீசியல் அகாதெமி), சுந்தராபுரத்தில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.10 மணியளவில் குண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவும் புரளி எனத் தெரியவந்தது.

இதேபோல, கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அக்ரானி கடற்படை கணக்குப் பிரிவு அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கும் நடத்தப்பட்ட சோதனையில் அதுவும் புரளி எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகராட்சிப் பூங்காவில் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்களால் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 75-க்கும் மேற்பட்ட சந்தன ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குனியமுத்தூா்

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத... மேலும் பார்க்க

தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு தனியாா் கோழித் தீவன உற்... மேலும் பார்க்க

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை விரட்டும் சிறுத்தை

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை சிறுத்தை துரத்தும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ள நிலையில் சில நேரங்களில் அங்கு வசிக்கும் சிறுவா்க... மேலும் பார்க்க

கஞ்சா, போதை ஸ்டாம்பு விற்பனை: மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்த 3 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை வெள்ளக்கிணறு பகுத... மேலும் பார்க்க