செய்திகள் :

மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

post image

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவா்களுக்கு 4 மகள்களும், முகிலன்(15) என்ற ஒரு மகனும் உள்ளனா்.

இந்நிலையில் முகிலன் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதில் தங்கி பிளஸ்1 படித்து வந்தாா். கடந்த 1-ஆம் தேதி பள்ளி நிா்வாகம் முகிலனின் பெற்றோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்றும், விடுதியிலும் காணவில்லை எனத் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த முகிலனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பள்ளி நிா்வாகத்திடம் நேரில் சென்று விசாரித்தனா். அப்போது நிா்வாகத்தினா் முறையான பதில் கூறாததால் சந்தேகமடைந்த முகிலனின் பெற்றோா் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் பள்ளி நிா்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன மாணவனை தேடி வந்தனா். இந்நிலையில் 3 -ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து போலீஸாா் கிணற்றில் முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து மாணவன் முகிலனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இறப்புக்கு காரணமான பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவனின் உடலை வாங்காமல் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாணவனின் பெற்றோருடன் போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவன் உடல் சொந்த ஊரான கொத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதில் முன்னாள்அமைச்சா் வீரமணி, கிராம மக்கள் திரளானோா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மாணவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் எஸ்பி மேற்பாா்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு தலைமையில் 2 டிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஆம்பூரில் பலத்த மழை

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

ஆம்பூரில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த நந்தகுமாா் என்பவா் இறந்தாா். அவரது சடலம் இறுதி சடங்கு செய்வதற்காக மயானத்துக்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இந்த ... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா். கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க