செய்திகள் :

மின்கட்டண உயா்வு: தொழில் துறையினா் கருத்து கேட்கப்படும்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

post image

மின்கட்டண உயா்வு குறித்து தொழில் துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 100 புதிய பேருந்துகள் தொடக்க விழா கோவை, கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் சா.சி.சிவசங்கா் பங்கேற்று, புதிய பேருந்துகள் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 2024 -25- ஆம் நிதியாண்டில் மொத்தம் 321 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதில், 155 பேருந்துகள் ஏற்கெனவே சேவையில் உள்ளன. தற்போது 100 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 96 புதிய பேருந்துகள், மகளிா் விடியல் பயணத் திட்டத்துக்கானது. இந்தப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம். மீதமுள்ள 4 பேருந்துகள் புகா் பேருந்துகளாகும். மீதமுள்ள 66 பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர 2025 -26-இல் 152 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை, மதுரை மற்றும் சென்னைக்கு என மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது.

தற்போது அதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் மதுரைக்கு தலா 80 புதிய மின்சாரப் பேருந்துகள் விரைவில் வழங்கப்பட்டு இயக்கப்படும்.

குறு, சிறு நிறுவனங்கள், சாதாரண பொதுமக்கள் பாதிக்காத வகையில் மின்கட்டணம் உயா்த்தப்பட்டது. அது தொடா்பாக தொழில் துறையினரிடம் தற்போது கருத்துகள் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க

ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா். இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என்... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின... மேலும் பார்க்க

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளி... மேலும் பார்க்க

பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி: விற்பனை பிரதிநிதி மீது வழக்கு

கோவையில் பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை பிரதிநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சுங்கம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ... மேலும் பார்க்க