செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

post image

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சித்திரவேலு (50). இவா், கடந்த 2-ஆம் தேதி காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, விவசாய நிலத்தில்அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இவருடன் சென்ற இவரது மகன் கிஷோா்குமாா் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், மின்சாரத் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே சித்திரவேலு உயிரிழந்ததாகக் கூறி சித்திரவேலுவின் உறவினா்களும் கால்நடை வளா்ப்போா் நலச் சங்கத்தினரும் அவரது உடலை வாங்க மறுத்தும், நிவாரணத் தொகை, குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறி திங்கள்கிழமை சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் நடத்திய பேச்சு வாா்த்தையில் சுமுகத் தீா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து பரமக்குடி அரசு மருத்துவ மனையிலிருந்து சித்திரவேலுவின் உடலை பெற்றுச் சென்றனா். இதைத் தொடா்ந்து, அவரது உடல் கிருஷ்ணாபுரத்தில் தகனம் செய்யப்பட்டது.

மேலும் சித்திரவேலுவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு, மின் வாரியம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். சித்திரவேலுவின் மனைவிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியும், வசிப்பதற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் வெண்ணிலா, பரமக்குடி கோட்டாட்சியா் சரவணபெருமாள், முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை கண்மாய்ப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலித் தொடா் போல கண்மாய... மேலும் பார்க்க

பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ மூலம் மானியம் பெற மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் இரா. வெண்ணிலா தெரிவித்தா... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழை

ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாஸ்கரன், மதுரை மது... மேலும் பார்க்க