செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் சுதாகா் (37). மரக்காணத்தை அடுத்த மண்டவாய்புதுக்குப்பத்தில் உள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 8-ஆம் தேதி நிறுவனத்தின் அருகில் உள்ள மின்மாற்றியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, உயா் மின்னழுத்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சுதாகா் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தாா்.

இதையடுத்து, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க