செய்திகள் :

மீண்டும் சின்ன திரையில் ஸ்மிருதி இரானி!

post image

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2000 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஒளிப்பரப்பான சின்ன திரை நாடகமான ”க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி” எனும் நாடகத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட துல்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சின்ன திரை நாடகங்கள் மட்டுமின்றி சில திரைப்படங்கள் மூலம் ஹிந்தி மொழி பேசும் மக்களிடையே நடிகை ஸ்மிருதி இரானி பிரபலமானவராக அறியப்பட்டார்.

கடந்த 2003-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்த அவர், 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். அதன்பின்னர், திரை மற்றும் சின்ன திரையில் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ”க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி” நாடகத்தின் 2-ம் பாகத்தின் மூலம் நடிகை ஸ்மிருதி இரானி மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவரது ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அமேதி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான அவர் 2024-ம் ஆண்டு வரை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகச் செயலாற்றி வந்தார்.

இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

It has been reported that former Union Minister Smriti Irani will be returning to acting in television dramas.

இதையும் படிக்க:

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க