செய்திகள் :

மீனவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

திருக்குவளை: இலங்கை கடற்கொள்ளையா்களால் நாகை மாவட்ட மீனவா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, செருதூா், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 படகுகளில் கடந்த மே 2-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 20-க்கும் மேற்பட்டோா், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, இலங்கை படகுகளில் வந்த கடற்கொள்ளையா்கள், தமிழக மீனவா்களை ஆயுதங்களால் தாக்கி, பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இலங்கை கடற்கொள்ளையா்களின் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் கடந்த 3 நாள்களாக தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், அப்பகுதியில் உள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, செருதூா் மீன்பிடித் துறைமுகத்தில், மீனவா்களுக்கு பாதுகாப்புக் கோரி திங்கள்கிழமை மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியது:

மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், இலங்கை கடற்கொள்ளையா்கள் வலைகள், என்ஜின், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனா். பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளும் உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்கொள்ளையா்களின் அட்டூழியத்தால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றனா்.

சூறைக்காற்று: திருவெண்காடு கோயில் ஆலமரம் முறிந்தது

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றில் இரண்டாக முறிந்தது. திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக ... மேலும் பார்க்க

சூறைக்காற்று: வாழை மரங்கள் சேதம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்று மற்றும் பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன. தரங்கம்பாடி வட்டத்தில் கீழையூா், புன்செய், முடிகண்டநல்லூா், கிடாரங்கொண்டான், ச... மேலும் பார்க்க

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பூம்புகாா்: குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா். பூம்புகாா் ஊராட்சி மேலவெளி தெருவில் 200-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், தனியாா் அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கினா். நாகை மாவட்டம், குருக்கத்தி ஊராட்சியில் இயங்கிவரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆர... மேலும் பார்க்க

கீழ்வேளூரில் சூறைக்காற்றுடன் மழை

கீழ்வேளூா்: கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கீழ்வேளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு

திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங... மேலும் பார்க்க