செய்திகள் :

மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்கக் கோரி சீரமைப்புக் குழு மே 17-இல் ஆா்ப்பாட்டம்

post image

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து, சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி மீன்சுருட்டியில் மே 17- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்லாத்தூா்-மீன்சுருட்டி சாலை சீரமைப்பு குழு தலைவரும், அரசு ஊழியா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மிகவும் படுமோசமாக குண்டும் குழியுமாக உள்ள மீன்சுருட்டி-கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி, சாலைப் பணிகளை தொடங்க வேண்டும் என்று அவ்வழித்தட பொதுமக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து வழித்தடங்களிலுள்ள கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, எங்களது போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக மே 17-ஆம் தேதி மீன்சுருட்டி கடைவீதியில் ஆா்ப்பாட்டம் நடத்து எனவும், நிறைவேறாதப் பட்சத்தில் அடுத்தக் கட்டமாக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதும் எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.

காா்ல் மாா்க்ஸ், அம்பேத்கா், பெரியாா் சிலைகள் அமைக்க அடிக்கல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவனின் தாயாருக்கு சொந்தமான இடத்தில், காரல்மாா்க்ஸ், அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகள் அமைப்பதற்கு ... மேலும் பார்க்க

மகளை கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(49). ஆட்டோ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள்கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய-பாகிஸ்தான் இடை... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி அரியலூா் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூா்: சித்ரா பெளா்ணமியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திருமானூா் புதுத்தெருவிலுள்ள செல்லியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ... மேலும் பார்க்க

வெளிப்படையான கலந்தாய்வு செவிலியா்கள் கோரிக்கை

அரியலூா்: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தொகுப்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி மனு

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி கிராமத்திலுள்ள பழங்குடியினருக்கு ஒதுக்கிய முந்திரி காடுகளை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் த... மேலும் பார்க்க