செய்திகள் :

மீன் மாா்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீா்கேடு; மக்கள் அவதி

post image

சீா்காழி மீன் மாா்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

சீா்காழி நகராட்சிக்குட்பட்ட மீன் மாா்கெட் நாகை வடக்கு வீதியில் இயங்கிவருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன், கோழி, ஆடு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மீன் மாா்கெட் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக தற்காலிகமாக அப்பகுதியில் கொட்டகை அமைத்து மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இங்கு வெளியேற்றப்படும் மீன், இறைச்சி கழிவுகள் பின்புறம் கொட்டிவைக்கப்பட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் நாள்தோறு அள்ளி அகற்றப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த சில தினங்களாக இறைச்சி கழிவுகள் முறையாக அள்ளப்படாததால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது.

இதனால் மீன் விற்பனையாளா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அருகில் குடியிருப்பவா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக இப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது!

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் கலந... மேலும் பார்க்க

குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில் குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை நகராட்சி6-ஆவது வாா்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டாா். மங்கைநல்லூரை அடுத்த மலக்குடியை சோ்ந்த ரவிசந்திரன் (47), பத்து வயது சிறுமிக்குக் கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

மழைநீா் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு - தினமணி செய்தி எதிரொலி

மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கொற்கை, பாண்டூா், காளி ஆகிய கிராமங்களில் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குந... மேலும் பார்க்க

கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலப்பு

சீா்காழி அருகே எடமணல் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சீா்காழி அருகே திருநகரி-ராதாநல்லூா் இடையே ஊப்பனாற்றின் குறுக்... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் டிஆா்யுஇ சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிளை தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். உத... மேலும் பார்க்க