செய்திகள் :

முகலாய அரசர்களின் பெயரில் சாலைகளா? கருப்பு மை பூசி அழித்த புத்த மத அமைப்பினர்!

post image

தில்லியில் முகலாயர்கள் மற்றும் சுல்தான் ஆட்சியாளர்களின் பெயர்களைக் கொண்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளில் புத்த மத அமைப்பினர் கருப்பு மை பூசி அழித்தனர்.

புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகலாய மன்னர்களின் பெயர் கொண்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளில் பாரதிய பௌத்த சங்கத்தின் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர்.

இதில், ஷாஜகான் சாலைக்கு பதிலாக வீர் சாவர்க்கர் சாலை, துக்ளக் சாலைக்கு பதிலாக அஹில்யா பாய் சாலை, அக்பர் சாலைக்கு பதிலாக மகரிஷி வால்மிகி சாலை, ஹுமாயுன் சாலைக்கு பதிலாக பாலாசாகேப் தாக்கரே சாலை போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிச் சென்றனர்.

இதுபற்றி புது தில்லி முனிசிபல் கவுன்சில் சார்பாக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய பாரதிய பௌத்த சங்கத்தின் தலைவர் சங்பிரியா ராகுல், “பல கொடுமைகளை நிகழ்த்திய முகலாய மன்னர்களின் பெயரைப் பொது இடங்களுக்குச் சூட்டுவதைத் தடுக்குமாறு பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கவுள்ளோம். எங்களுக்கு முகலாயர்களின் பெயர்கள் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20 அன்று மஹாராணா பிரதான் சிலை சேதப்படுத்தப்பட்டதகாக் கூறப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் அக்பர் சாலையின் பெயர்ப் பலகையை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதேபோல, கடந்த மாதமும் அக்பர் சாலை, ஹுமாயுன் சாலை பெயர்ப் பலகைகளில் சத்ரபதி சிவாஜியின் போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாஜக தலைவர் தினேஷ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் ஆகியோர் துக்ளக் சாலையில் உள்ள தங்களது வீடுகளின் பெயர்ப் பலகைகளில் விவேகானந்தா சாலை என குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் துக்ளக் சாலை என எழுதியிருந்தனர்.

இதையும் படிக்க | முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க