செய்திகள் :

முதல்வா் பிறந்த நாள்: திமுகவினா் நலத்திட்ட உதவி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி தலைமை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி., தலைமைக் கழகப் பேச்சாளா்கள் ஆடுதுரை உத்திராபதி, ஸ்ரீராம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தின் போது சுமாா் ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட விவசாய தொண்டரணி துணைச் செயலா் வ.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆ.மோகனவேல், வெங்கடேஷ்பாபு, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது

செய்யாற்றில் இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவை... மேலும் பார்க்க