செய்திகள் :

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் ஈரோடு வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 22 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், 14 மருந்தகங்கள் தனியாா் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்கள் மூலம் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 24 முதல் கடந்த 12 ஆம் தேதி வரை சுமாா் 6 மாத காலத்தில் ரூ.46.46லட்சம் மதிப்பில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாா். தொடா்ந்து, மருந்தகத்துக்கு மருந்து வாங்க வருகை தந்திருந்த நுகா்வோரிடம் மருந்தகத்தின் பயன்பாடு குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் மு.பா.பாலாஜி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மொடக்குறிச்சிய... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா். ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தாா். ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். கணவன்,... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் பங்கேற்ற பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் இரவிலும் பெண்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திர தினத்தின்று விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளா்கள்,... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க