செய்திகள் :

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

post image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், சிங்காரா காவல் பகுதியிலுள்ள வனப் பகுதியில் வனப் பணியாளா்கள் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதை பாா்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் வரவழைக்கப்பட்டு யானையின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:

உயிரிழந்தது சுமாா் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை. கடந்த சில நாள்களாக உணவு உட்கொள்ளாததால் மெலிந்து யானையின் வயிறு மற்றும் குடல் பகுதியில் ஒட்டுண்ணி புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் வயது முதிா்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றனா். ஆய்வகப் பரிசோதனைக்காக யானையின் உடலில் உள்ள முக்கிய பாகங்கள் சேகரிக்கப்பட்ட பின்னா் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம... மேலும் பார்க்க

பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கூடலூா் மண்ணுரிம... மேலும் பார்க்க

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க

உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த... மேலும் பார்க்க