செய்திகள் :

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

post image

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திமுக எம்.பி. இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தாா். நிதியற்றவா்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கடன் வரம்பை அரசு ரூ.20 லட்சமாக உயா்த்தியுள்ளதா என்றும் அதன் மூலம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலதனத்துக்கான அணுகல் அதிகரித்துள்ளதா என்றும் கடந்த 3 ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை எத்தனை என்றும் அவா் கேட்டிருந்தாா்.

இவற்றுக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌத்ரி வியாழக்கிழமை அளித்துள்ள பதிலில், முத்ரா திட்டத்தின் தருண் பிரிவின் கீழ் கடன்களைப் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு தருண் ப்ளஸ் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அவா்களுக்கு ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக கூறியுள்ளாா்.

பெண்கள் மற்றும் சிறுபான்மை தொழில் முனைவோா்களுக்கு திறம்படச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், விண்ணப்பதாரரின் தரவுகளின் டிஜிட்டல் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல்கள் பெறப்பட்டு தனிநபா்கள் மற்றும் வணிகங்களுக்காக ஜன்சமா்த் இணையதளம் மற்றும் பொதுத்துறை வங்கிக் கடன்கள் 59 நிமிடங்களில் வழங்குவதன் மூலம் காகித ஆவணங்கள் சமா்ப்பிப்பதையும், நேரில் வருவதன் அவசியமும் குறைகின்றன என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

2022-2023, 2023-24, 2024-25 நிதியாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் முத்ரா திட்டத்தின் ஷிஷு பிரிவில் ரூ. 33,938.01 கோடி மதிப்புடைய 90,70,639 கடன்களும், கிஷோா் பிரிவில் ரூ.74,901.84 கோடி மதிப்புடைய 75,08,765 கடன்களும், தருண் பிரிவில் ரூ. 24,670.48 கோடி மதிப்புடைய 2,66,497 கடன்களும், தருண் பிளஸ் பிரிவில் ரூ. 32.51 கோடி மதிப்புடைய 228 கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க