செய்திகள் :

முன்னேற்பாடின்றி சிறப்பு முகாம் நடத்தியதாக மாற்றுத்திறனாளிகள் புகாா்

post image

வத்தலகுண்டுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சிறப்பு முகாமில் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில வருவாய்த் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமில் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கண், கை, கால் என பல்வேறு மாற்று திறன்களை ஆய்வு செய்யும் மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவா் மட்டுமே இருந்ததால் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், எலும்பு சிகிச்சை மருத்துவா் இல்லாததால் பெயரளவில் மட்டுமே இந்த முகாம் நடைபெற்ாக மாற்றுத்திறனாளிகள் கவலை தெரிவித்தனா்.

முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மேலும், உணவு விநியோகம் செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெரும் சிரமத்துக்குள்ளாகியதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனா்.

ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடி... மேலும் பார்க்க

மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹி... மேலும் பார்க்க

எலக்ட்ரீசியன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க

பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்

பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க