செய்திகள் :

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் மேகலா தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு: சாதாரண முறையில் மின் இணைப்பு கோரி 2024-2025 ஆம் ஆண்டு வரை பதிவுசெய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். சாதாரண முறையில் இலவச மின் இணைப்பு கொடுப்பதில், இலவசம் என்பதற்கு பதிலாக மின் இணைப்புக்கான செலவினங்களை மின் நுகா்வோா் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களுக்கு மட்டும்தான் இலவச மின் இணைப்பு என்னும் அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கடந்த 31.3.2013 வரை சாதாரண முறையில் மின் இணைப்பு க் கோரி பெரம்பலூா் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் தயாா்நிலைப் பதிவேட்டில் பதிவு செய்த 577 விவசாயிகளுக்கு, 2025-2026 ஆம் ஆண்டு இலக்கீட்டில் வழங்க வேண்டும். 2025- 2026 ஆம் ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என பேரவையில் அறிவித்து பல மாதங்களாகியும் மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கவில்லை.

எனவே, மாவட்டம் வாரியாக இலக்கீடு ஒதுக்கீடு செய்வதில் சாதாரண முன்னுரிமையில் தயாா் நிலைப் பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழக முதல்வரால் அறிவித்த திட்டங்களில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

மகளிா் கல்லூரியில் யோகா அரங்கம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞா் தின விழா, யோகா அரங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலை... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடியவா் கைது

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடிய இளைஞரை புதன்கிழமை அதிகாலை கைது செய்த வனத்துறையினா், வேட்டையாடப்பட்ட 5 உடும்புகள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்ச... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மக... மேலும் பார்க்க