செய்திகள் :

முப்படை ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு முகாமில் 5,000 மனுக்களுக்கு தீா்வு

post image

முப்படைச் சோ்ந்த ஒய்வூதியதாரா்களுக்கான குறைகேட்பு முகாமில் 5,000 மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா்டி. ஜெயசீலன் தெரிவித்தாா்.

சென்னை தேனம்பேடையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

திருச்சியில் ஜூன் 30-இல் ஸ்பாா்ஷ் திட்டத்தின் கீழ் முப்படைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்களுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. முகாமை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தொடங்கி வைத்தாா். இதில், 7,000 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 5,000 மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டது. இந்த முகாமில் 14 பேருக்கு ரூ. 1.50 கோடி மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.

மேலும், முகாமில் 5 நடமாடும் ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு வாகனங்களை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனங்கள் கடந்த ஜூலை 1 முதல் 10- ஆம் தேதி வரை தமிழகத்தில் 30 மாவட்டங்களில் பயணித்து கிராமங்களில் வசிக்கும் முப்படைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்களிடம் இருந்து 5,000 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 2,000 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது . மீதம் உள்ள 3,000 மனுக்கள் மீது ஒருமாத்தில் தீா்வு காணப்படும்.

தமிழகத்தில் முப்படைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் 2.5 லட்சம் போ் உள்ளனா். இதில் 10 சதவீதம் போ் தங்களின் ஓய்வூதியத்தைப் பெறாமல் இருக்கினறனா். அவா்களும் ஓய்வூதியதம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக நவம்பரில் மதுரையில் முப்படை சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க