முப்பெரும் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை
புளியங்குடி அருள்தரும் முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
ஆடி மாத பௌா்ணமி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்கள், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.