செய்திகள் :

மும்பையில் கனமழை: தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

post image

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் மழை குறைந்து, கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மும்பை நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இருப்பினும், மழையின் தீவிரம் அதிகாலை முதல் குறைந்தது.

மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இயக்கம் மெதுவாக இருந்தாக வாகன ஓட்டிகள் தெரித்தனர்.

மேலும் உள்ளூர் ரயில்களும் சிறிது தாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் சிலர் புகார் கூறினர்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மும்பை நகரத்தில் சராசரியாக 23.45 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 36.42 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 50.02 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Heavy rains lashed Mumbai overnight, causing waterlogging in some low-lying areas and slowing vehicular movement in parts of the city, civic officials said on Monday.

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்க... மேலும் பார்க்க

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' - ராகுல் காந்தி இரங்கல்!

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி

வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்த... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடி... மேலும் பார்க்க