செய்திகள் :

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’

post image

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மும்பையில் பாந்த்ரா -குா்லா ரயில் வளாகத்தில் சுரங்க ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாந்த்ரா- குா்லா வளாகத்தில் புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தின் கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த நிலையத்துக்கான சுவரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுரங்கப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

ரூ.1.08 லட்சம் கோடி செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்த புல்லட் ரயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மத்திய அரசின் செலவினம் ரூ.10,000 கோடி. குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தலா ரூ.5,000 கோடி செலவிடும். எஞ்சிய தொகையை 0.1 சதவீத வட்டிக்கு ஜப்பான் கடனாக வழங்கும்.

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்த பென் குரியன் சா்வதேச விமான நிலையம் அருகே யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் 4 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலையடுத்து, தில்லிய... மேலும் பார்க்க

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பிரியதா்சினி காலமானாா்!

தெலங்கானா உயா்நீதிமன்ற பெண் நீதிபதி எம்.ஜி.பிரியதா்சினி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு ஹைதராபாதில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தெலங்கானா... மேலும் பார்க்க

எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு! இந்தியாவும் தக்க பதிலடி!

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து 10-ஆவது நாளாக சனிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசியல் பிரபலங்களின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கம்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர்... மேலும் பார்க்க

மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தில்லியிலிருந்து அங்குச் செல்லவிருந்த விமானத்தை அபுதாபிக்கு ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிவிட்டது. இ... மேலும் பார்க்க

நீட் தேர்வு நிறைவு: இயற்பியல் கடினம்; உயிரியல் சற்று எளிமை!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்... மேலும் பார்க்க