செய்திகள் :

மும்பையை சுற்றிப்பார்க்க வந்த பெண்; இடமில்லாமல் ரயிலில் உறங்கிய போது பாலியல் வன்கொடுமை..

post image

மும்பையில் தாதர், பாந்த்ரா, மும்பை சென்ட்ரல், குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற இடங்களில் ரயில்வே டெர்மினஸ் இருக்கிறது.

இதில், பாந்த்ரா ரயில்வே டெர்மினஸில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலில் உறங்கிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்திருந்த அந்த ரயிலில் 54 வயது பெண் உறங்கிக்கொண்டிருந்தார். இதை கவனித்த ராகுல் ஷேக் என்பவர், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ரயிலின் கார்டு பெட்டிக்கு இழுத்துச்சென்று அங்கு வைத்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது மருமகனும் மும்பையை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் தங்குவதற்கு சரியான இடம் இல்லாத காரணத்தால் ஓரமாக நிறுத்தி இருந்த ரயிலில் ஏறிபடுத்துக்கொண்டனர். ரயில் நிலையத்தில் போர்டர் வேலை செய்து வந்த ராகுல் ஷேக் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அவர்கள் ரயிலில் உறங்கியவுடன் மெதுவாக உள்ளே சென்று அப்பெண்ணை மிரட்டி அருகில் இருந்த ரயில்வே கார்டு பெட்டிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளியின் புகைப்படம் பதிவாகி இருந்தது.

சம்பவம் அதிகாலையில் 1.50 மணிக்கு நடந்திருந்தது. குற்றவாளி மீண்டும் காலை 5 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தார். அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டபெண் சொந்த ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அட... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கில் CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு; வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்..

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ... மேலும் பார்க்க

``மிரட்டல், சித்ரவதையால் தளர்ந்துவிட்டேன்..'' -உறவின் போது காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் இக்பால்(32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்தது. இந்நிலையில், இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் பிணமாக கிடந்தது ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `முட்டைப் பொரியலில் விஷம் வச்சுட்டேன்' - காதலை கைவிட மறுத்த மகள்; தாய் செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி கொடுத்த முகமூடி ஆசாமிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பெட்ரோல்... மேலும் பார்க்க

மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர்.... மேலும் பார்க்க