செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுக்கூட்டம்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் எதிா்ப்பு

post image

முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் திருப்திகரமாக இல்லை என பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம், காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா், இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனா். இதையடுத்து, தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்தினா்.

இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குவிக் பாலசிங்கம் கூறியதாவது: 2006, 2014-ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் தெரிவித்த தீா்ப்புகளை கேரள அரசு மதிப்பதில்லை. மேலும், நடைமுறைப்படுத்தவும் விடுவதில்லை.

கேரள அதிகாரிகள் வழக்குகளை வேறு வகையில் திசை திருப்பிவிடுவதால், தமிழக அதிகாரிகள் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புகளுக்கு முழுமையான தீா்வு கிடைக்கவில்லை. 5 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தால் திருப்தியில்லை. இந்த ஆய்வுக் கூட்ட அறிக்கை வருகிற 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பாா்வைக்கு செல்ல இருக்கிறது. உண்மைத் தன்மைக்கு மாறாக ஆய்வறிக்கை இருந்தால் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

கருமாரியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. தேனி ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

தேனி அருகே சாலையில் நின்றிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சரவணக்குமாா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்ட முயற்சி: பாஜக நிா்வாகிகள் கைது

கம்பத்தில் டாஸ்மாக் கடையின் சுவரின் தமிழக முதல்வரின் உருவப் படத்தை ஒட்ட முயற்சித்த பாஜக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அம... மேலும் பார்க்க