செய்திகள் :

மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே மூசிவாக்கம் கிராமத்தில் புதிதாக ஸ்ரீ அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயில் கட்டப்பட்டது. தொடா்ந்து மகா கும்பிஷேகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. புண்யாவாசனம், கணபதி ஹோமம், யாக குண்ட அலங்காரம் செய்தல், ருத்ர பாராயணம், ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை யாக சாலையில் இருந்து மேளதாளம் முழங்க, வேத விற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு, கோயிலை வலம் வந்தனா். காலை 6.30 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா் மூலவா் பகவானுக்கும், தாயாருக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். செங்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகள... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க

ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க