செய்திகள் :

மூலனூரில் 42 மி.மீட்டா் மழை பதிவு

post image

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. திருப்பூா் மாநகா் மட்டுமின்றி அவிநாசி, தாராபுரம், காங்கயம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மூலனூரில் அதிகபட்சமாக 42 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகள் (மழையின் அளவு மில்லி மீட்டரில்) வட்டமலைக்கரை ஓடை- 33.60, மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம்- 32, நல்லதங்காள் ஓடை அணை- 27, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம்- 25, உப்பாறு அணை- 23, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம்- 20.20, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம்- 20, தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம்- 19.50, குண்டடம்- 19, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம்- 18.50, திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகம், வெள்ளக்கோவில் வருவாய் அலுவலகம்- 18, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்- 16, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம்- 15, உடுமலை வட்டாட்சியா் அலுவலகம், மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகம்- 4, திருமூா்த்தி அணை- 3.

‘தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் நிறுவன... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

அவிநாசிலிங்கேஸ்வரா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்ம... மேலும் பார்க்க

மாவட்டத்தில் மாா்ச் 17 முதல் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் விட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளியங்காடு முதல்வா் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் முதல்வா் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகத்தில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

நெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவனத்துக்கு!

தெற் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் வேளாண் துறை அலுவலா் வளா்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:... மேலும் பார்க்க