செய்திகள் :

மூளி தேவி: சப் இன்ஸ்பெக்டராக மாறுவேடமிட்டு போலீஸ் அகாடமியிலேயே 2 ஆண்டுகள் சுற்றிய பெண் - யார் இவர்?

post image

ராஜஸ்தான் போலீஸ் அகாடமி உள்ளேயே இரண்டு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டர் போல மாறுவேடம் போட்டு திரிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றுள்ளார், அதிகாரப்பூர்வ சீருடைகள் அணிந்து வலம் வந்திருக்கிறார், மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் புகைப்படங்கள் கூட எடுத்திருக்கிறார்.

எனினும் வகுப்பறைகளுக்குள்ளும், உள் பயிற்சி அரங்குகளுக்குள்ளும் நுழைவது இயலாத காரியம் எனத் தெரிவித்துள்ளது ராஜஸ்தான் போலீஸ் அகாடமி.

மூளி தேவி
மூளி தேவி

மூளி தேவி என்ற போலி அடையாளம்

ஜெய்பூரில் குற்றவாளி மோனா புகாலியா (எ) மூளிக்கு 2023ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் தலைமறைவாக இருந்திருக்கிறார். கடந்த வாரம்தான் பிடிபட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கியிருந்த அறையை காவல்துறையினர் சோதனையிட்டபோது 7 லட்சம் பணம், 3 சீருடைகள், ராஜஸ்தான் போலீஸ் அகாடமி தேர்வு தாள்கள், போலி அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களைக் கண்டெடுத்துள்ளனர்.

தற்போதைய விசாரணையில் மூளி ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள நிம்பா கே பாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இவரது தந்தை ஒரு லாரி ஓட்டுநர்.

2021ம் ஆண்டு துணை ஆய்வாளர் ஆட்சேர்ப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மூளி தேவி என்ற பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். சமூக ஊடகங்களில் தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் எனப் பதிவு செய்து வலம்வந்துள்ளார்.

பின்னர் புதிதாக பணியில் சேரும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் சேர்க்கப்பட்ட முந்தைய பேட்ச் அதிகாரி என்ற போர்வையில் ராஜஸ்தான் போலீஸ் அகாடமியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

Rajasthan Police Academy

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழு சீருடையில் ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் அணிவகுப்பு மைதானத்தில் தினசரி காட்சியளித்து வந்துள்ளார். அங்கு நடந்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். உயர் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

சீருடையில் தன்னை ஒரு காவலர் போல காட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் மோட்டிவேஷனல் ரீல்ஸ்களைப் பதிவிட்டு வந்துள்ளார். காலவராக முயற்சிக்கும் பலருக்கு அட்வைஸ்களை அள்ளி வழங்கியுள்ளார்.

இவரது நடவடிக்கை சில பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தவே, உயர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர். தப்பியோடி தலைமறைவானவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடகமாடியது ஏன்?

தொடக்கநிலை விசாரணையிலேயே தான் போலி ஆவணங்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார் புகாலியா. 4 சகோதரிகளுடன் பிறந்த அவர், தனது குடும்பத்தை திருப்திபடுத்துவதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் காவல்துறை தொடர்பான அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

"மூளி தேவியாக போலீஸ் அகாடமியில் நுழைந்த அவர் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ரீல்ஸ் செய்துள்ளார், கூடுதல் காவல் துறை இயக்குநர்களுடன் டென்னிஸ் விளையாடியுள்ளார், மக்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்... மொத்த உலகத்தையும் சரிபார்க்கும் காவலர்கள், சொந்த துறையில் விடுவதா? இது வெறும் குறைப்பாடு அல்ல, நிறுவன சிதைவின் வெளிப்பாடு" என விமர்சித்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் விஜய் கும்பர்.

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிக... மேலும் பார்க்க

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? - இளைஞரிடம் போலீஸார் விசாரணை

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர். அந்த மாணவர், அ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!

டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்... மேலும் பார்க்க

`அன்று அதை விரும்பவில்லை, கட்டாயபடுத்தி உறவுகொண்டதால்...' - புனே பாலியல் புகாரில் திருப்பம்

புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்து... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் ... மேலும் பார்க்க