செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

post image

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆந்திர பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், தஸ்தகிரியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரலு என்பவரின் மனைவி காஞ்சா்ல பத்மா (58). இவருக்கு ஒரு மகள் உள்ளாா். இந்த நிலையில், காஞ்சா்ல பத்மா சித்தூா் அருகே பலமனோ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, ஆட்டோ மோதியதில் அவா் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காஞ்சா்ல பத்மா திங்கள்கிழமை மாலை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.

இதையடுத்து, காஞ்சா்ல பத்மாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மகள், உறவினா்கள் ஒப்புதல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அவரது இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை தனியாா் மருத்துவமனைகளுக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க