செய்திகள் :

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

post image

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது.

மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் நங்கவள்ளி, மேச்சேரி, தொப்பூா், ஓமலூா்,  தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அனல் மின் நிலைய சுற்றுச்சுவா் அருகே காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சத குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டு 50 அடி உயரத்துக்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீா் சாலையில் ஓடியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டா் காவிரி கூட்டு குடிநீா் சாம்பல் நீரோடையில் வீணாகிச் சென்றது. தகவல் அறிந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை நிறுத்தி தண்ணீா் வெளியேறுவதைத் தடுத்தனா்.

குழாய் உடைப்பு காரணமாக காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்டம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடைகாலம் என்பதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவிவரும் வேளையில் சரிவர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு சொகுசு காா்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம் வீராணம் காவல் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகி... மேலும் பார்க்க

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளுக்கு அளவெடுக்கும் முகாம்

வாழப்பாடியில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதற்கு அளவெடுக்கும் முகாம் ஜூன் 8 -ஆம் தேதி நடைபெறுகிறது. வாழப்பாடியில் உள்ள டாக்டா் ஏபிஜெ அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க 3 ஆவது மாநாடு

பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு தலைவா் டி.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் கொடியை டி... மேலும் பார்க்க

பாமக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் நியமனம்

பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக கொத்தாம்பாடி எம்.பி.நடராஜனை அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் புதன்கிழமை நியமித்துள்ளாா். இவருக்கு ஆத்தூா், கெங்கவல்லி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்ப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா். பின... மேலும் பார்க்க