செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

post image

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்த காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கு காரணமாக கடந்த 25 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 25 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25,400 கனஅடியாக அதிகரித்து பின்னர் படிப்படியாக அதிகரித்தது. திங்கள்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 1,10,500 கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக வினாடிக்கு 1,10,500 கனஅடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர் வரத்து புதன்கிழமை காலை 70,400 கனஅடியாக குறைந்தது.

அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 70,400 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வினாடிக்கு 92,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 52,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்

The water inflow to the Mettur Dam has started to decrease after the rains stopped in the catchment areas of the Cauvery.

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் ம... மேலும் பார்க்க

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் ... மேலும் பார்க்க

பதிவுத் தபால் சேவையை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் ச... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மின் கம்பத்தில் அடிபட்டு கிடந்த மயிலை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஏழு நிமிடங்களில் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.புதன்கிழமை மாலை, சிங்காநல்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,500 கன அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்... மேலும் பார்க்க

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுத... மேலும் பார்க்க