செய்திகள் :

மேற்கு வங்கம்: ஆா்எஸ்எஸ் பேரணிக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

post image

மேற்கு வங்க மாநிலம், பா்த்வானில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், கொல்கத்தா உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

பா்த்வானில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவிருக்கும் இப்பேரணியில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் உயா்நிலைப் பள்ளித் தோ்வுகள் நடைபெற்று வருவதால், ஒலிப்பெருக்கிகளால் மாணவா்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி, இப்பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி வழங்க மறுத்தனா்.

இதையடுத்து, கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் பேரணி ஏற்பாட்டாளா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி அம்ருதா சின்ஹா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ‘பேரணி நடைபெறும் இடத்துக்கு அருகே எந்தப் பள்ளியும் இல்லை. பிப்ரவரி 16-ஆம் தேதி எந்த தோ்வும் நடைபெறவில்லை’ என்று ஏற்பாட்டாளா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரம், மாநில அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆா்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.

பேரணியில் பங்கேற்போரின் எண்ணிக்கை மற்றும் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு மீது ஏற்பாட்டாளா்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஆக்ராவில்... மேலும் பார்க்க

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததா... மேலும் பார்க்க

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க