செய்திகள் :

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

post image

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் அனைத்து பொருள்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருப்பது அமெரிக்க-இந்தியா வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய அடியாகும்.

வெளியுறவு கொள்கை மற்றும் அரசப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மோடி-டிரம்ப் நட்புறவு கொடுக்க முடியாது. இந்தியாவை சிறந்த நாடாக்குவோம்(மெகா) என மோடியும், அமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்(மெகா) என மோடியும் டிரம்பும் இணைந்து கூறினார்களே, என்னவாயிற்று இப்போது என கூறியுள்ளார்.

மேலும், 'தோஸ்தி' என்பது ராஜதந்திரம் மற்றும் கடினமான பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று கிடையாது.

அமெரிக்கா விதித்த வரி உலக வர்த்தக அமைப்பு விதிகளை தெளிவாக மீறுவதாகும்

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

The 25 per cent tariff on all Indian exports to the United States PLUS penalty for buying Russian oil is a big blow to India's trade with the U.S.

டிரம்ப் வரிவிதிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகித வரி மற்ற... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பா? - ராமதாஸ் பதில்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக வெளியான தகவல் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற... மேலும் பார்க்க

கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்

சவுதி அரேபியாவில் கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 20,500 கன அடியாக சரிந்தது.காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்ததால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் ... மேலும் பார்க்க

பதிவுத் தபால் சேவையை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.எளிய மக்கள் பயன்படுத்தி வரும் பதிவுத் தபால் ச... மேலும் பார்க்க