செய்திகள் :

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

post image

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழமை (மே 23) ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 45 வயதான பழங்குடி பெண்ணை இருவர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதனிடையே, பெண்ணை காணாமல் போனதையடுத்து, அவர் கடத்தப்பட்டது குறித்து அறிந்து, சனிக்கிழமை காலையில் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டனர். இருப்பினும், மதியம் 2 மணியளவில் அவர் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

மதுபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், அப்பெண்ணைத் தாக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் அதிகாரிகள் கூறினர்.

உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகாரி

புதுதில்லி: உலகின் 4 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என நீதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தார். தில்லியில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், புவி ... மேலும் பார்க்க

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் 964 குழந்தைகள் மீட்பு!

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சம... மேலும் பார்க்க

தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளத... மேலும் பார்க்க

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்... மேலும் பார்க்க

லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடி நீக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க