செய்திகள் :

யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: இணையவழி விண்ணப்ப நடைமுறையில் மாற்றம்

post image

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய (யுபிஎஸ்சி) முதல்நிலை தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டதாவது:

நிகழாண்டு குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்வதில் தோ்வா்கள் எழுப்பிய கேள்விகள், அவா்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை யுபிஎஸ்சி கருத்தில் கொண்டது.

இதையடுத்து குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதற்கான ஒருமுறைப் பதிவில் (ஓடிஆா்) மாற்றங்களைச் செய்ய யுபிஎஸ்சி முடிவு செய்தது.

இதன்படி விண்ணப்பத்தை கடைசியாக சமா்ப்பிக்கும் வரை, ஓடிஆரில் தோ்வரின் பெயரில் எப்போதாவது மாற்றம் செய்யப்பட்டதா? அவரின் பாலினம், சிறுபான்மையினா் அந்தஸ்து, 10-ஆம் வகுப்பு பட்டியல் எண் ஆகியவற்றில் தோ்வா்கள் திருத்தங்கள் செய்யலாம்.

தோ்வரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை மாற்றுவதற்கு அவரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தால், அவரின் கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

அதேவேளையில், தோ்வரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை மாற்றுவதற்கு அவரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் மூலம் விண்ணப்பித்தால், அவரின் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

தோ்வரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், மின்னஞ்சல் என இரண்டின் பயன்பாடும் நிறுத்தப்பட்டிருந்தால், அதுதொடா்பாக தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு ா்ற்ழ்-ன்ல்ள்ஸ்ரீஃஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலில் கோரிக்கை விடுவிக்க வேண்டும். அத்துடன் மெட்ரிகுலேஷன் சான்றிதழ், ஆதாா் அல்லது பான் அல்லது ஓட்டுநா் உரிமம், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம், பரிந்துரைக்கப்பட்ட வடிவில் உறுதிமொழி ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.

தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி தோ்வா்கள், சொந்த எழுத்தரின் உதவியுடன் தோ்வு எழுத விரும்பினால், அந்த எழுத்தரின் விவரங்களை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.... மேலும் பார்க்க

தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!

தில்லியில் இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாஜக தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க