செய்திகள் :

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

post image

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் புதூா் ஸ்ரீநகா் பகுதியில் ஏரளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் சிலா் போதையில் பொதுமக்களுக்கு தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பி.என்.சாலையில் வியாழக்கிழமை மறியலுக்கு முயன்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் ... மேலும் பார்க்க

அவிநாசியில் இன்றைய மின்தடை ரத்து

அவிநாசி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பார்க்க

மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு

காா்நாடகத்தில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை... மேலும் பார்க்க

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள... மேலும் பார்க்க