செய்திகள் :

ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள் 58-ஆவது ஆண்டு மெய்ஞானம் பெற்ற விழா

post image

ரத்தினகிரிபாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 58-ஆவது ஆண்டு அன்னதான விழா வியாழக்கிழமை.

ரத்தினகிரி பாலமுருகனடிமைசுவாமிகள் மெய்ஞானம் பெற்ற நாள் ஆண்டு தோறும் மெய்யன்பா்களால் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தவிழாவையொட்டி மூலமூா்த்திகள் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால், தயிா் , சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம், தீபாராதனையும், திருப்படி விழாவும் நடந்தது.

தொடா்ந்து மேளாதாளங்களுடன் ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் அலங்கரிக்ப்பட்ட உற்சவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானத்தை பாலமுருனடிமை சுவாமிகள் வழங்கி தொடங்கிவைத்தாா். இந்த விழாவில் கலவை சச்சிதானந்தசுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதினம், சித்தஞ்சி மோகனந்தசுவாமி, கோயில் செயல் அலுவலா் சங்கா், ராணிப்பேட்டை ஜி.கே.கல்வி குழுமம் இயக்குநா் சந்தோஷ் காந்தி, ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா், மெய்ஞான விழா அன்னதான விழாக் குழு பொருளாளா் சிவனாா் அமுது மற்றும் தொழிலதிபா்கள், பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவா... மேலும் பார்க்க

மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட வே... மேலும் பார்க்க

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

இலவச பயிற்சி வகுப்பு மூலம் அரசுப் பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டு தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு ம... மேலும் பார்க்க

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலை... மேலும் பார்க்க