'யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்' - திண்டுக்க...
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே ஆலக்குடி - பூதலூருக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் பலத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவா் யாா் என விசாரிக்கின்றனா்.