செய்திகள் :

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

post image

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஈரோடு மாவட்டத்தில் ரயில் பாதைகளில் கற்கள் வைப்பதை தடுக்கவும், ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் (ஆா்பிஎஃப்), ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில் ஈரோடு வாய்க்கால்மேட்டில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரின் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஓடும் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்கள் வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்தும், இச்செயல்களில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ரயில்கள் மீது கல் எறிவது, தண்டவாளங்களில் கற்கள் வைத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மோகன்குமாா், ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் மற்றும் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க

நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியி... மேலும் பார்க்க

உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்

உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோ... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க